செய்திகள்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்

24 மணி நேரத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

Published On 2020-05-06 11:05 GMT   |   Update On 2020-05-06 11:05 GMT
காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் ராணுவ அதிகாரி உள்பட 8 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதல்களுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினர் பின்னனியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நேற்று முதல் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், புல்வாமா மாவட்டம் புஹுபுரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களைநோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. 

இந்நிலையில் காஷ்மீரின் புஹுபுரா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்து வந்த இந்த என்கவுண்டரில் இதுவரை  4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் சில பகுதிகளில் இன்னும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News