செய்திகள்
சத்தீஸ்கர்- நக்சலைட் தாக்குதலில் போலீஸ்காரர் மரணம்
சத்தீஸ்கரில் இன்று நக்சலைட்டின் கத்திக்குத்து தாக்குதலில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
பிஜாபூர்:
சத்தீஸ்கரின் மிர்துர் கிராமத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சைட்டு கட்தி என்பவர் தனது குடும்பத்தாருடன் இன்று சந்தைக்கு சென்றிருந்தார். மதியம் 2 மணியளவில் அங்கு வந்த நக்சலைட்டுகள் சிலர் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சைட்டு கட்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய நக்சல்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.