செய்திகள்

ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 7 பேர் பலி

Published On 2019-04-21 03:24 GMT   |   Update On 2019-04-21 03:24 GMT
மெயின்புரி அருகே ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News