செய்திகள்

டெல்லியில் பனி மூட்டம்: ரெயில்களின் புறப்பாடு, வருகை நேரத்தில் தாமதம்

Published On 2019-01-20 04:58 GMT   |   Update On 2019-01-20 06:45 GMT
தலைநகர் டெல்லியில் இன்று காலை அதிக அளவில் பனி மூட்டம் நிலவியதால் ரெயில்களின் புறப்பாடு, வருகை நேரத்தில் தாமதம் ஏற்பட்டது.
வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.

குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் இன்று காலை டெல்லி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் ரெயில்கள் தவித்தன. அந்த அளவிற்கு பனி மூட்டம் நிலவியது. அதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் புறப்பட முடியவில்லை.

பனி மூட்டத்துடன் காற்று மாசும் மோசமடைந்துள்ளது. இதனால் இன்று காலை 9 ரெயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
Tags:    

Similar News