செய்திகள்

சபரிமலையில் கூட்ட நெரிசலை நிர்வகிப்பது குறித்து திருப்பதியில் ஆலோசனை

Published On 2018-10-09 06:11 GMT   |   Update On 2018-10-09 06:11 GMT
சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கேரள அரசு 3 பேர் குழுவை அமைத்துள்ளது. அவர்கள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். #Tirupati #Sabarimala
திருமலை:

கேரள மாநிலம் சபரி மலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி அவர்களுக்கு அத்தியாவசிய வசதிகளை அளிக்க கேரள அரசு 3 பேர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

அந்த 3 பேர் குழு திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு கூட்ட நெரிசலை நிர்வகிப்பது குறித்து அவர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள தரிசன வசதிகள், தங்கும் வசதி, அன்னதானம், குடிநீர், கழிப்பிட வசதி, சுகாதாரம் பேணுதல், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீரை சுத்திகரித்து அதை மரம், செடி, கொடிகளுக்கு பாசனம் செய்தல் உள்ளிட்டவை குறித்தும் அவர் விளக்கினார்.

அதை உன்னிப்பாக கவனித்த கேரள குழுவினர், பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது என பாராட்டினர்.

ஆலோசனைக் கூட்டத்தில் கேரள மாநில மக்கள் நலத்துறை தலைமை செயலர் கமலநாதன் ராவ், வருவாய்த் துறை தலைமைச் செயலர் ஜோதிலால், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி, அனந்தகிருஷ்ணன் மற்றும் தேவஸ்தானத்தின் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News