செய்திகள்

ஆயுத கொள்ளை முறியடிப்பு - காஷ்மீரில் பயங்கரவாதியை சுட்டுக் கொன்ற போலீஸ்

Published On 2018-09-08 03:18 GMT   |   Update On 2018-09-08 03:18 GMT
ஜம்மு காஷ்மீரில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். #JKAttack #JKMilitantKilled
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் நேற்று இரவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது பயங்கரவாதிகள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.



போலீசாரின் பதிலடியால் மற்ற பயங்கரவாதிகள் பின்வாங்கி தப்பிச் சென்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் அவன் எந்த குழுவை சேர்ந்தவன் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், போலீசார் தக்க பதிலடி கொடுத்ததால் ஆயுத கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. #JKAttack #JKMilitantKilled

Tags:    

Similar News