செய்திகள்

பா.ஜ.க. எம்.எல்.ஏ. நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்

Published On 2018-09-07 07:47 GMT   |   Update On 2018-09-07 07:47 GMT
பெண்களை கடத்துவேன் என்று கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்கதம் நாக்கை யார் வெட்டி துண்டிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான சுபத்சவ்ஜி அறிவித்துள்ளார். #BJP #RamKadam
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராம்கதம். சமீபத்தில் இவர் ஒரு விழாவில் பேசுகையில், “இளைஞர்களே... நீங்கள் காதலிக்கும் பெண் பற்றி சொல்லுங்கள். அந்த பெண்ணை கடத்தி வந்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்” என்று அறிவித்தார். அதோடு தனது செல்போன் எண்ணையும் வெளியிட்டார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து ராம்கதம் எம்.எல்.ஏ. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சுபத்சவ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களை கடத்துவேன் என்று கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்கதம் நாக்கை யார் வெட்டி துண்டிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். #BJP #RamKadam


Tags:    

Similar News