செய்திகள்

மும்பை கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து - 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன

Published On 2018-08-22 04:29 GMT   |   Update On 2018-08-22 06:40 GMT
மும்பை இந்துமாதா சினிமா அருகே உள்ள கிரிஸ்டல் டவரில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அங்கு 10 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். #MumbaiFire #CrystalTowerFire
மும்பை:

மும்பையில் மிகவும் பரபரப்பான பரேல் பகுதியில் உள்ளது இந்துமாதா சினிமா. இதன் அருகே உள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளங்களில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


 
புகையின் அளவு படிப்படியாக அதிகரித்து 3-ம் நிலையை எட்டியபோது தீப்பிழம்புகள் வெளியே தெரிந்தது. இதனையடுத்து கட்டிடத்தில் இருந்தவர்கள் ராட்சத கிரேன் மூலம் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. #MumbaiFire #CrystalTowerFire
 
Tags:    

Similar News