செய்திகள்

உ.பி. போலீஸ் தேர்வில் ஹைடெக் மோசடி - மீரட்டில் 22 பேர் கைது

Published On 2018-06-19 09:29 GMT   |   Update On 2018-06-19 09:29 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் போலீஸ் தேர்வில் மோசடி செய்தது தொடர்பாக மீரட்டில் 22 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். #UPPoliceExam #HiTechCheating
மீரட்:

உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு நேற்றும் இன்றும் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, விசாரணையில் இறங்கிய சிறப்பு அதிரடிப் படை போலீசார் நேற்று முன்தினம், கோரக்பூரில் 11 பேரையும், அலகாபாத்தில் 3 பேரையும் கைது செய்தனர்.

அத்துடன், இந்த ஹைடெக் மோசடிக் கும்பலின் தலைவனைப் பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.



இந்நிலையில், மீரட் நகரில் போலீசார் நடத்திய சோதனையில் மோசடியில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #UPPoliceExam #HiTechCheating 
Tags:    

Similar News