செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 7 பேர் பலி

Published On 2018-06-01 09:07 GMT   |   Update On 2018-06-01 09:07 GMT
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். #Lightningkills
ஐதராபாத்:

ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மின்னல் தாக்கி நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கியதில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. நேற்று இரவு பெய்த கனமழையில் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. கடும் மழையினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #Lightningkills
Tags:    

Similar News