செய்திகள்

சிறார் காப்பகத்திலிருந்து தப்பிச்சென்ற 15 சிறுவர்கள் - தேடும் பணியில் போலீசார் தீவிரம்

Published On 2018-05-14 05:35 GMT   |   Update On 2018-05-14 05:35 GMT
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிச்சென்ற 15 சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #SaidabadJuvenileHome
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சைதாபாத் பகுதியில் மாநில அரசால் நடத்தப்படும் சிறார் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 18 வயதிற்கு உள்ள கீழ் தவறு செய்த சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காப்பகத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச்சென்றது சிசிடிவி-யில் பதிவானது. 14-17 வயதுடைய அந்த சிறுவர்கள் இரவில் வெண்டிலேட்டர் துளை வழியாக வெளியே வந்து சுவரில் ஏறி குதித்து சென்றனர். இவர்கள் ஏராளமான குற்றங்களை செய்துள்ளனர். அதில் ஒரு சிறுவனை தப்பிக்க முயன்ற போது போலீசார் பிடித்தனர்.

இதையடுத்து, காப்பகத்தின் மேற்பார்வையாளர் மற்றும் இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவை வைத்து சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #SaidabadJuvenileHome
Tags:    

Similar News