செய்திகள்

நீதி கிடைத்ததால் மகிழ்ச்சி - ஆசாராம் பாபுவால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை பேட்டி

Published On 2018-04-25 08:02 GMT   |   Update On 2018-04-25 08:02 GMT
ஆன்மீகவாதி ஆசாராம் பாபுவால் கற்பழிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் தந்தை இவ்வழக்கில் நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது என பேட்டியளித்தார். #AsaramBabu #AsaramCaseVerdict #AsaramVerdict
லக்னோ:

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு (77). இவரது ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதேபோல் பல்வேறு பலாத்கார வழக்குகள் இவர் மீது குவிந்தன.

இதையடுத்து, ஆசாராம் பாபுவை கடந்த 31-8-2013 அன்று போலீசார் கைது செய்து கற்பழிப்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. ஆசாராமை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஆசாராம் பாபுவால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை பேட்டியளித்தார். 'இந்த வழக்கில் நீதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான்கு மாதங்களாக நாங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தோம். அதனால் எங்கள் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பு எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது' என அவர் கூறினார். #AsaramBabu #AsaramCaseVerdict #AsaramVerdict


Tags:    

Similar News