செய்திகள்

குஜராத்தில் டிரக் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Published On 2018-03-10 12:23 GMT   |   Update On 2018-03-10 12:23 GMT
குஜராத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பயணம் செய்த டிரக் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் ராஜ்கோட்- பாவ்நகர் நெடுஞ்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு டிரக் வேகமாக சென்றுகொண்டிருந்தது. பாவ்நகர் பகுதியில் சென்றபோது திடீரென டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாக்கடைக் கால்வாயில் விழுந்தது.

இந்த விபத்தில் டிரக்கில் பயணம் செய்தவர்களில் சுமார் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் முதல் நாளில் 4 பேரும், மறுநாள் 2 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 2 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருந்த லாரி டிரைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாதது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #tamilnews

Tags:    

Similar News