செய்திகள்

ஆக்ரா: ஸ்கூட்டியில் இருந்த பட்டாசு வெடித்து இருவர் பலி

Published On 2017-10-08 15:42 GMT   |   Update On 2017-10-08 15:42 GMT
உத்தர பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் ஸ்கூட்டி வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் அதில் சென்ற இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.
லக்னோ:

ஆக்ரா நகரில் மகாத்மா காந்தி சாலை அருகே உள்ள நயீ கி மண்டி பகுதி வழியாக இன்று மாலை 5 மணியளவில் வந்த ஸ்கூட்டி வாகனம் திடீரென்று வெடித்து தீப்பிழம்பாக மாறியது. இந்த விபத்தில் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் மற்றும் பின்னால் அமர்ந்து வந்தவர் என இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர்தான் இதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News