செய்திகள்
மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வதந்தியால் பரபரப்பு
கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த வதந்தியால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
பெங்களூர்:
கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவர் துபாய் செல்வதற்காக காத்திருந்தார். விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை எலக்ட்ரானிக் ஸ்கீரினிங் செய்வது வழக்கம். இதன் மூலம் பையில் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் இருந்தால் தெரிய வரும்.
அதே போன்று அந்தக் கேரள பயணியின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது அவரது பையில் வித்தியாசமான பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது வெடி குண்டாக இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் பயணியிடம் விசாரணை செய்தனர். ஆனால், அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பவர் பேங் என்பது விசாரணைக்கு பின் தெரிய வந்தது.
ஆரம்பத்தில் அந்த பொருள் வெடிகுண்டாக இருக்கும் என சந்தேகத்தினால் விமானநிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவர் துபாய் செல்வதற்காக காத்திருந்தார். விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை எலக்ட்ரானிக் ஸ்கீரினிங் செய்வது வழக்கம். இதன் மூலம் பையில் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் இருந்தால் தெரிய வரும்.
அதே போன்று அந்தக் கேரள பயணியின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது அவரது பையில் வித்தியாசமான பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது வெடி குண்டாக இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் பயணியிடம் விசாரணை செய்தனர். ஆனால், அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பவர் பேங் என்பது விசாரணைக்கு பின் தெரிய வந்தது.
ஆரம்பத்தில் அந்த பொருள் வெடிகுண்டாக இருக்கும் என சந்தேகத்தினால் விமானநிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.