செய்திகள்

ரத்த நாளத்தில் அடைப்பு: உத்தராகண்ட் முன்னாள் முதல் மந்திரி டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2017-09-01 07:50 GMT   |   Update On 2017-09-01 07:51 GMT
உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹரிஷ் ராவத் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹரிஷ் ராவத் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹரிஷ் ராவத்(60). ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்துப்போன நிலையில் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

சர் கங்கா ராம் ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் வி.எஸ்.பேடி தலைமையில் அவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் சிகிச்சைகளை நாளவியல் துறை நிபுணர்கள் அளித்து வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News