செய்திகள்

குஜராத்தில் செய்தது போல் மேற்குவங்கத்தில் கலவரம் செய்யுங்கள்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. திமிர் பேச்சு

Published On 2017-07-09 09:29 GMT   |   Update On 2017-07-09 09:29 GMT
குஜராத் மாநிலத்தில் செய்தது போல், மேற்குவங்காள மாநிலத்திலும் இந்துக்கள் கலவரம் செய்ய வேண்டும் என்று ஐதராபாத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங் கூறியுள்ளார்.
ஐதராபாத்:

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவலை தொடர்ந்து பாதுரியா பகுதியில் கலவரம் ஏற்பட்டது. பின்னர் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. கலவரத்தை அடக்க எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டு, பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கலவரம் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்க “அமைதி படை”யை மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் செய்தது போல், மேற்குவங்காள மாநிலத்திலும் இந்துக்கள் கலவரம் செய்ய வேண்டும் என்று ஐதராபாத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. ராஜா சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மேற்குவங்காள மாநிலத்தில் இன்று இந்துக்கள் பாதுகாப்பாக இல்லை. மேற்குவங்காள இந்துக்கள் மதவன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது குஜராத்தில் இந்துக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.



இல்லையென்றால் மேற்குவங்காளம் வங்காளதேசமாக மாறிவிடும். பெங்கால் புலிகள் எழுச்சியுற்று தாமாக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேற்குவங்காள அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. வகுப்பு வாதத்தை பரப்புவதற்கு அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறது.” என்று பேசியுள்ளார்.

இதேபோல், தனது டுவிட்டர் பக்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், வீடியோக்களையும் அவர் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.


Tags:    

Similar News