செய்திகள்

அசாம் மாநிலத்தில் பேய் என நினைத்து 3 வயது சிறுவன் அடித்துக் கொலை

Published On 2017-04-25 12:32 GMT   |   Update On 2017-04-25 12:32 GMT
அசாம் மாநிலத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 வயது சிறுவனை பேய் என நினைத்து அடித்துக் கொன்ற நபரை அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
திஸ்பூர்:

அசாம் மாநிலத்தில் நாகோன் மாவட்டத்தில் நேற்றிரவு சால்னா என்ற பகுதியில் தனது தந்தைக்காக 3 வயது சிறுவன் சாலையின் ஓரத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த லஹ்மன் தாக்கூர் என்ற நபர் தனியாக நிற்கும் சிறுவனைப் பார்த்து பேய் என நினைத்து அச்சத்துடன் அந்த சிறுவனை கடுமையாக பலமுறை தாக்கியுள்ளார்.

லஹ்மனின் தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர்வாசிகள் பெரும் ஆத்திரத்தில் சிறுவனை அடித்துக் கொன்ற லஹ்மனை துவைத்து எடுத்தனர். இதனால் படுகாயமடைந்த லஹ்மன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல் துறை அதிகாரிகள், மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் லஹ்மனை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Similar News