செய்திகள்

4 ஆண்டுகளில் கடும் வெயிலுக்கு 4,620 பேர் பலி

Published On 2017-04-23 23:48 GMT   |   Update On 2017-04-23 23:48 GMT
கடந்த 4 ஆண்டுகளில், அனல் காற்று மற்றும் கடும் வெயிலுக்கு 4 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:

கடந்த 4 ஆண்டுகளில், அனல் காற்று மற்றும் கடும் வெயிலுக்கு 4 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பலியானோர் எண்ணிக்கை மட்டும் 4 ஆயிரத்து 246 ஆகும். மத்திய புவியியல் அமைச்சகம் இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2013-ம் ஆண்டில் ஆயிரத்து 443 பேரும், 2014-ம் ஆண்டில் 549 பேரும், 2015-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 71 பேரும், 2016-ம் ஆண்டில் 557 பேரும் பலியாகி உள்ளனர். 

Similar News