செய்திகள்
மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் சலாம் காலமானார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் சலாம் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.
இம்பால்:
கடந்த 1948-ம் ஆண்டில் மணிப்பூர் மாநிலத்தின் ஹெய்போங் என்ற கிராமத்தில் பிறந்த அப்துல் சலாம், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சலாம், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குச் சென்ற முதல் முஸ்லிம் உறுப்பினராவார்.
69 வயதான அப்துல் சலாம், கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சலாம் காலமானார். அவருக்கு மனைவி ஒரு மகன் மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தின் சட்டசபை உறுப்பினராக மூன்று முறை திறம்பட பணியாற்றியுள்ள சலாம், அம்மாநில ஊரக வளர்சித்துறை மந்திரியாகவும் இருந்துள்ளார்.
கடந்த 1948-ம் ஆண்டில் மணிப்பூர் மாநிலத்தின் ஹெய்போங் என்ற கிராமத்தில் பிறந்த அப்துல் சலாம், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சலாம், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குச் சென்ற முதல் முஸ்லிம் உறுப்பினராவார்.
69 வயதான அப்துல் சலாம், கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சலாம் காலமானார். அவருக்கு மனைவி ஒரு மகன் மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தின் சட்டசபை உறுப்பினராக மூன்று முறை திறம்பட பணியாற்றியுள்ள சலாம், அம்மாநில ஊரக வளர்சித்துறை மந்திரியாகவும் இருந்துள்ளார்.