செய்திகள்

பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்: காதலியின் தந்தையை சுட்டுக்கொன்ற வாலிபர்

Published On 2017-02-25 14:09 GMT   |   Update On 2017-02-25 14:09 GMT
பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் காதலியின் தந்தையை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம், பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பாட்னா மாநிலம் போஜ்பூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சொம்பால்(48). இவரின் மகளும் அதே பகுதியை சேர்ந்த மொண்டு(25) என்னும் வாலிபரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர்.இந்நிலையில், காதலியைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த மொண்டு, சொம்பால் வீட்டிற்கு சென்று அவரது மகளைத் திருமணம் செய்து தருமாறு கேட்டிருக்கிறார்.

மொண்டுவிற்குப் பெண் தர சொம்பால் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மொண்டு, சொம்பாலை துப்பாக்கியால் சுட சம்பவ இடத்திலேயே சொம்பால் மரணமடைந்தார். இதுதொடர்பாக போஜ்பூர் போலீசார் தற்போது மொண்டுவைக் கைது செய்துள்ளனர்.

பெண் கொடுக்க மறுத்த காதலியின் தந்தையை காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம், போஜ்பூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News