செய்திகள்

மேற்கு வங்கம்; பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பரிதாப பலி

Published On 2017-01-22 12:49 GMT   |   Update On 2017-01-22 12:49 GMT
மேற்கு வங்கம் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்கத்தா;

மேற்கு வங்கம் மாநிலம் பிபும் மாவட்டத்தில் இல்லம்பசார் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று அதிக வேகத்தில் வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி, சாலையின் அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகிலிருந்த துர்காபுர் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை துர்காபுர் மற்றும் போல்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News