செய்திகள்
ராஜ்நாத் சிங்குடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்திப்பு
தமிழக அரசியல் நிலைமை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரி நிதின்கட்கரி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் டெல்லி சென்று இருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தமிழக அரசியல் நிலைமை குறித்து விளக்கியதாக தெரிகிறது. பின்னர் வெளியில் வந்த கவர்னரிடம் நிருபர்கள் கேட்டபோது, “தமிழ்நாட்டில் அரசியல் நிலைமை சுமுகமாக இருக்கிறது. இதுகுறித்து உள்துறை மந்திரியிடம் விளக்கினேன்” என்றார்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரி நிதின்கட்கரி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் டெல்லி சென்று இருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தமிழக அரசியல் நிலைமை குறித்து விளக்கியதாக தெரிகிறது. பின்னர் வெளியில் வந்த கவர்னரிடம் நிருபர்கள் கேட்டபோது, “தமிழ்நாட்டில் அரசியல் நிலைமை சுமுகமாக இருக்கிறது. இதுகுறித்து உள்துறை மந்திரியிடம் விளக்கினேன்” என்றார்.