செய்திகள்

பன்முகத்தன்மை கொண்டவர் சோ: பிரதமர் மோடி புகழாரம்

Published On 2016-12-07 04:51 GMT   |   Update On 2016-12-07 06:19 GMT
பன்முகத்தன்மை கொண்டவர், சிறந்த அரசியல்வாதி சோ என அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

மறைந்த பத்திரிகையாளர் சோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது-

சோ சிறந்த தேசியவாதி. பன்முகதன்மை கொண்டவர். அச்சமின்றி பேசக்கூடியவர். வெளிப்படை தன்மையுடன் பழகக் கூடியவர். சிறந்த அறிவாளி.

இவற்றை எல்லாம் விட அவர் எனக்கு நெருங்கிய நண்பர் ஆவார். சோவின் குடும்பத்தினருக்கும், துக்ளக் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News