செய்திகள்
ஜெயலலிதா மறைவால் இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரும் வெற்றிடம்: பிரதமர் மோடி
ஜெயலலிதா மறைவால் இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவல் தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயலலிதா உயிரிழந்த தகவல் வெளியானதையடுத்து இந்திய அளவில் உள்ள அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ஜெயலலிதா மறைவால் இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவல் தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயலலிதா உயிரிழந்த தகவல் வெளியானதையடுத்து இந்திய அளவில் உள்ள அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ஜெயலலிதா மறைவால் இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.