செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானச் சேவைகள் 2-வது நாளாக பாதிப்பு

Published On 2016-12-02 23:50 GMT   |   Update On 2016-12-02 23:50 GMT
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானச் சேவைகள் 2-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. பின்னிரவில் தொடங்கும் பனிமூட்டம் காலை 10 மணிவரை விலகாமல் டெல்லி நகரம் முழுவதும் பனித்திரையால் மூடப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது.

காலை வேளைகளில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்லும் அளவுக்கு பனிபெய்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதியிலும் உறைபனி பெய்ததால் ஓடுதளம் பகுதி இருண்டு காணப்பட்டது. ஓடுதளம் பகுதியில் தெளிவான காட்சி இல்லாததால் நேற்று(வெள்ளிக்கிழமை) 140-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 7 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மொத்த 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதில் 7 மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வியாழக்கிழமையும் 200-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 16 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

Similar News