செய்திகள்

பிரதமர் மோடி புள்ளி விவர அரசியல் நடத்துகிறார்: காங்.எம்.பிக்கள் கூட்டத்தில் ராகுல் பேச்சு

Published On 2016-12-02 07:18 GMT   |   Update On 2016-12-02 07:18 GMT
பிரதமர்மோடி தனது செல்வாக்கை வளர்ப்பதில் தான் அக்கறை காட்டுகிறார் என்று ராகுல் காந்தி பேசினார்.

புதுடெல்லி:

டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் எம்.பிக் கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள வில்லை. துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கினார்.

அப்போது பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கையிலேயே கவனம் செலுத்துகிறார். புள்ளிவிவர அரசியல் நடத்துகிறார். முற்றிலும் புள்ளி விவரத்தையே நம்பி இருக்கும் இது போன்ற ஒரு பிரதமரை காங்கிரஸ் ஒரு போதும் தந்தது இல்லை.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி முழு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர்களது திட்டம் முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. எல்லா பணமும் கருப்பு பணம் அல்ல. எல்லா கருப்பு பணமும் ரொக்கமாக இல்லை.

ரொக்க பண பொருளாதாரம் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடி பெரும் குழப்பம் அடைந்துள்ளார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Similar News