செய்திகள்

பள்ளி விழாவில் கலந்து கொண்ட ஒடிசா முதல்–மந்திரி மீது முட்டை வீச்சு

Published On 2016-10-26 14:10 GMT   |   Update On 2016-10-26 14:11 GMT
பள்ளி விழாவில் கலந்து கொண்ட ஒடிசா முதல்–மந்திரி நவீன் பட்நாயக் மீது மாணவர் காங்.தொண்டர் ஒருவர் முட்டை வீசினார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பரிபடா:

ஒடிசா மாநிலம் மயூர்பான்ஜ் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக முதல்–மந்திரி நவீன் பட்நாயக் சென்றார். சுலியபடா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழாவில் முதல்–மந்திரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்–மந்திரிக்கு எதிராக மாணவர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென முதல்–மந்திரியை நோக்கி மாணவர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் முட்டையை வீசினார். ஆனால் அது முதல்–மந்திரி மீது விழவில்லை. இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குள் முட்டை வீசிய காங்கிரஸ் தொண்டரை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

பின்னர்அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Similar News