செய்திகள்

வெளிநாட்டு சொத்து விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2016-10-25 07:59 GMT   |   Update On 2016-10-25 07:59 GMT
வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் குறித்த முழு தகவல்களை 4 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரபல தொழில் அதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி பெற்று மோசடி செய்த அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி இருந்தது. பாஸ்போர்ட் முடக்கத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அவர் சுப்ரீம் கோர்ட் டில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

இதற்கிடையே விஜய் மல்லையா தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாட்டில் உள்ள சொத்துவிவரம் குறித்த முழு தகவல்களை 4 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் டியாஜியோ நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.267 கோடி விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

Similar News