செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இளம்பெண் குத்திக்கொலை: டெல்லியில் கொடூரம்

Published On 2016-10-24 09:17 GMT   |   Update On 2016-10-24 09:17 GMT
மெட்ரோ ரெயில் நிலையத்தில் 22 வயது இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது டெல்லி:

டெல்லியைச் சேர்ந்த குர்கான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை 9.30 மணியளவில் 22 வயது இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரருகே வந்த 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென அவரைக் கத்தியால் சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களும், மெட்ரோ நிலைய பணியாளர்களும் அந்த இடத்துக்கு விரைந்து வந்து கத்தியால் குத்தப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி 11.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சம்பவம் நடைபெற்ற போது மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லையென்றும், இந்த சம்பவத்தால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்படவில்லை என்றும் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் பிங்கி என்றும் அவரைக் கத்தியால் குத்திய நபரின் பெயர் ஜிதேந்திரா என்பதும் தெரியவந்துள்ளது. பிங்கியை, ஜிதேந்திரா என்ன காரணத்திற்காக கத்தியால் குத்தினார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News