செய்திகள்

எல்லையில் மோதல்: 7 பாகிஸ்தான் வீரர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது

Published On 2016-10-21 14:46 GMT   |   Update On 2016-10-21 14:46 GMT
எல்லையில் நடைபெற்ற மோதலில் 7 பாகிஸ்தான் வீரர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
ஜம்மு:

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

இன்று அதிகாலை காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹீரா நகர் செக்டாரில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கியாலும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.

இதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் தீவிரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்தத் தகவலை எல்லைப் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.

Similar News