செய்திகள்

எல்லையில் நிலவும் பதட்டம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2016-10-01 15:19 GMT   |   Update On 2016-10-01 15:19 GMT
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழல் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழல் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பாகிஸ்தான் நடத்திய உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Similar News