செய்திகள்

திருப்பதி அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரம் கடத்திய 2 பேர் கைது

Published On 2016-09-29 05:47 GMT   |   Update On 2016-09-29 05:47 GMT
திருப்பதி அருகே செம்மரம் கடத்திய 2 தமிழர்களை போலீசார் கைது செய்தனர்.
திருமலை:

திருப்பதி அருகே உள்ள மூங்கில்பட்டு வனப்பகுதியில் ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வனப்பகுதியில் லாரி ஒன்று நின்றிருந்தை பார்த்தனர்.

அருகில் சென்றபோது, லாரியில் செம்மரங்களை வெட்டி சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும், செம்மரக் கடத்தல் கும்பல் தப்பி முயன்றனர்.

போலீசாரும் விடாமல் துரத்தினர். 2 பேர் சிக்கினர். மற்றவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், சேலம் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 27 செம்மர கட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் வனப்பகுதியில் பதுங்கி உள்ள செம்மர கடத்தல் கும்பலை பிடிக்கவும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Similar News