செய்திகள்

தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம்

Published On 2016-09-26 11:37 GMT   |   Update On 2016-09-26 11:37 GMT
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசியதில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் வான்போக் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று கையெறி குண்டை வீசி தாக்கினர். கையெறி குண்டு வெடித்ததில் 3 பாதுகாப்பு படை போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாட அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News