செய்திகள்
ஆந்திரா–ஒடிசா எல்லையில் 167 மாவோய்ஸ்டுகள் போலீசில் சரண்
ஆந்திரா–ஒடிசா எல்லையில் 167 மாவோய்ஸ்டுகள் போலீஸ் சூப்பிரண்டு மித்ரபானு மகாபாத்ரு முன்னிலையில் சரண் அடைந்தனர். தங்களிடம் இருந்த ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.
நகரி:
ஆந்திரா– ஒடிசா எல்லையோர கிராமங்களில் மாவோயிஸ்டு, தீவிரவாதிகள் அதிகம் உள்ளனர். இங்குள்ள சில கிராமங்கள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தீவிரவாதிகளை ஒழிக்க எல்லையில் இருமாநில அரசின் அதிரடிப்படையும் கூட்டாக செயல்பட்டு வருகிறது.
ஆந்திர எல்லையையொட்டி ஒடிசாவில் உள்ள மல்காங்கிரியில் போலீஸ் படை அடிக்கடி சோதனை நடத்தி தீவிரவாதிகள் அட்டகாசத்தை அடக்கி வந்தனர்.
போலீசாரின் நெருக்கடியால் திணறிய மாவோயிஸ்டுகள் 167 பேர் மல்காங்கிரி போலீஸ் சூப்பிரண்டு மித்ரபானு மகாபாத்ரு முன்னிலையில் சரண் அடைந்தனர். தங்களிடம் இருந்த ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.
சரண் அடைந்த மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும், வேலைவாய்ப்புகளும் அரசு சார்பில் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.