- ஆம்புலன்ஸ் மோதி பணியாளர் இறந்தார்.
- நேற்று இரவு குமலத்திலிருந்து அனுமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
விழுப்புரம் :
வானூர் தாலுகா குமளம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் பசுபதி (வயது 26) இவர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அனுமந்தை அருகே உள்ள பால் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு குமலத்திலிருந்து அனுமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மஞ்சக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிரே சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வாகனம் இவர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாப மாக இருந்தார். இது குறித்த கோட்டகுப்பம் போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆம்புலன்ஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.