உள்ளூர் செய்திகள்

70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

Published On 2022-07-18 09:27 GMT   |   Update On 2022-07-18 09:27 GMT
  • 70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • ஓய்வு பெற்ற சிறை பணியாளர் நலச் சங்கம் தீர்மானம்

திருச்சி:

ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் நல சங்க அரையாண்டு கூட்டம் திருச்சி விருந்தினர் மாளிகைப் பகுதியில் நடைபெற்றது. முருகேசன் வரவேற்று பேசினார். பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் கிருஷ்ணன், ஆறுமுகம்,பசுபதி, வெள்ளைச்சாமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிைறவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

7-வது ஊதிய குழுவில் நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி படி 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூதியர்கள் இறந்தால் தமிழக அரசு வழங்கும் ரூ. 50,000 இழப்பீட்டு தொகையை இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மேற்கண்டவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News