உள்ளூர் செய்திகள்

குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்று பயிர் சாகுபடிக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்

Published On 2022-07-21 10:06 GMT   |   Update On 2022-07-21 10:06 GMT
  • மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

திருச்சி :

தா.பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

தா.பேட்டை வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடியின் உளுந்து, நிலக்கடலை, சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிறு தானியங்கள் தொகுப்பில் விதைகள், உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

பயறு தொகுப்பில் ரூ1,250, ரூ1,570-ம், எண்ணெய் வித்து தொகுப்பில் ரூ 4,002, ரூ5,600-ம் மானியமும் இடுபொருள்களுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News