உள்ளூர் செய்திகள்

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் வீராம்பாளையம் ஊராட்சி வார்டு இடைத் தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் நடந்தது

Published On 2022-07-09 09:55 GMT   |   Update On 2022-07-09 09:55 GMT
  • தீரம்பாளையம், தில்லாம்பட்டி, செங்குளிபட்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய இந்த ஊராட்சியில் இந்த ஐந்து வார்டில் மொத்த வாக்காளர்கள் 1,694 பேர் உள்ளனர்.
  • காலை 10 மணி நிலவரப்படி 454 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது.

திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தீராம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஐந்து வார்டு உறுப்பினர்கள் தலைவருக்கு எதிராக தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனை தொடர்ந்து அந்த ஐந்து வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தீரம்பாளையம், தில்லாம்பட்டி, செங்குளிபட்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய இந்த ஊராட்சியில் இந்த ஐந்து வார்டில் மொத்த வாக்காளர்கள் 1,694 பேர் உள்ளனர்.

அவர்கள் வாக்களிப்பதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. இதையடுத்து இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 454 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது. பெரும்பாலானவர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொருவராக வாக்களிக்க மையத்திற்கு வந்து சென்றனர். வயதானவர்களை காரில் அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். மிகவும் வயதானவர்கள் சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து வரப்பட்டனர். பொதுத்தேர்தல் போல இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்கள் விருப்பம் காட்டவில்லை. எனவே வாக்குச்சாவடி கூட்டம் இன்றி காணப்படுகிறது. இருந்த போதிலும் பலத்த பாதுகாப்பு பணியில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News