உள்ளூர் செய்திகள்

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் ஹோமியோபதி மருத்துவமுகாம்

Published On 2022-07-20 10:18 GMT   |   Update On 2022-07-20 10:18 GMT
  • மருத்துவர் அந்தோணி சாமி ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்து கூறி, மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
  • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்து பொருட்கள் மற்றும் மருந்துகள்வழங்கப்பட்டது

திருச்சி :

திருச்சி மாவட்டம்உய்யகொண்டான் திருமலை மாரிஸ்ட் அருட் சகோதரர்கள் நடத்தும் மார்சலீன் அறக்கட்டளை வானவில் தொண்டு நிறுவனம்சார்பில் ஜூலை மாத மாதந்திர கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்திற்கு இந்திய மாரிஸ்ட் தலைவர் அருட் சகோதரர் லாசர், அருட் சகோதரர்கள் சுரேஷ், ஜெயராஜ், ஆரோக்கியசாமி, சேசு மற்றும் ஹோமியோபதி மருத்துவர் அந்தோணி சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினர் ஹோமியோபதி மருத்துவர் அந்தோணி சாமி ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்து கூறி, மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

விழா ஏற்பாடுகளை வானவில் மார்சலீன் கிளப் உறுப்பினர்கள் செரின், சரண்யா ஆகியோர்செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள்கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்து பொருட்கள் மற்றும் மருந்துகள்வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விழா நிறைவு பெற்றது.

Tags:    

Similar News