உள்ளூர் செய்திகள்

இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

Published On 2022-09-20 09:45 GMT   |   Update On 2022-09-20 09:45 GMT
  • இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
  • கணவரை கைது செய்ய கோரி மனு

திருச்சி:

திருச்சி உய்ய கொண்டான் திருமலை எம்.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ பிரணவி (வயது23). இவருக்கு கடந்த 2019 -ம் ஆண்டு மே மாதம் மணப்பாறை வடுகபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

இவர்களுக்கு தற்போது சேஷா தரணி என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. திருமணத்தின் போது மணிகண்டன், ஸ்ரீ பிரணவி குடும்பத்தாரிடமிருந்து 20 சவரன் நகை வீட்டு உபயோகப் பொருட்கள் ரூ. ஒரு லட்சம் என வரதட்சணை பெற்றுள்ளார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து மணிகண்டன் மனைவியை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாக தாக்கி கூடுதல் வரதட்சனை வேண்டும் என்று கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீ பிரணவி திருச்சி கூடுதல் மகிழ நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்து கணவர் மணிகண்டனை கைது செய்ய வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News