உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

Published On 2022-09-23 08:58 GMT   |   Update On 2022-09-23 08:58 GMT
  • தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பூங்கா ரோட்டில் நின்று கொண்டிருந்தார்

திருச்சி:

முசிறி அடுத்த ஆமூர் பழைய புரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 43) கட்டிட தொழிலாளியாக இவர், சம்பவத்தன்று முசிறி பூங்கா ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது எம் புதுப்பட்டி சொரியம்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் தியாகராஜன் (38 ), அவரது தம்பி பாலு(25), அதே பகுதியை சேர்ந்த நெடுமாறன் மகன் கோவிந்தராஜ் (22), சண்முகம் மகன் ராஜேஷ்(19) ஆகியோர், தியாகராஜனிடம் தகராறில் ஈடுபட்டதோடு, தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயம் அடைந்த விஜயராஜ் கொடுத்த புகாரின் பேரில் முசிறி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News