உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர்கள் இடமாற்றம்

Published On 2022-07-25 08:01 GMT   |   Update On 2022-07-25 08:01 GMT
  • திருப்பூரில் இருந்த சண்முகசுந்தரம், ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

திருப்பூர்:

நிர்வாக வசதிக்காக திருப்பூர் மின்வாரியத்தில் பணியாற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவு செயற்பொறியாளர்கள் (நிலை - 1), 98 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இருந்த செயற்பொறியாளர் ராமச்சந்திரன், திருப்பூர் பகிர்மான வட்ட செயற்பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூரில் இருந்த சண்முகசுந்தரம், ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பல்லடம் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சத்யா, கோவை வடக்கு பகிர்மானத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பல்லடத்தில் இருந்த ஷர்மிளா கோவை வடக்கு மின்பகிர்மானத்துக்கும் மாற்றப்பட்டுள்ளார். தர்மபுரியில் இருந்த திருஞானசம்பந்தர் பல்லடம் (பொது) செயற்பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார்.அவிநாசி செயற்பொறியாளர் விஜயேஸ்வரன், பல்லடத்துக்கு மாற்றப்பட்டு சேலத்தில் இருந்த பரஞ்ஜோதி, அவிநாசிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த அலுவலகத்தில் பொறுப்பேற்று, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News