உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது.

பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து

Published On 2022-09-08 08:57 GMT   |   Update On 2022-09-08 08:57 GMT
  • 2 சிறுவர்கள் படுகாயம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே சின்ன பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 16), லோகேஷ் (வயது 17).இவர்கள் இருவரும் நேற்று வாங்கிய புதிய மோட்டார் சைக்கிளில் இருவரும் பொன்னேரி பகுதியில் இருந்து திருப்பத்துார் பகுதிக்கு பைக் சென்றனர்.

அப்போது எதிரே திருப்பத்துாரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிறுவர்கள் இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்த பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்துார் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தினால் சுமார் 30 நிமிடத்திற்கு மேல் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News