உள்ளூர் செய்திகள்
- ேபாலீசார் மடக்கி பிடித்தனர்
- ஜெயிலில் அடைப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீசார் நேற்று மாலை பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சம்பட்டு பகுதியில் சுடுகாட்டில் கருணாகரன் (வயது52) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அதேபோன்று சின்னவரிகம் சுடுகாட்டில் கிருஷ்ணமூர்த்தி (65) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். தென்னம்பட்டி மோட்டூர் பகுதியை சேர்ந்த தசரதன் (40) ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.
இவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 220 சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.