உள்ளூர் செய்திகள்

'ஷூ' கம்பெனியில் டீசல் திருடிய 3 பேர் கைது

Published On 2022-08-18 09:39 GMT   |   Update On 2022-08-18 09:39 GMT
  • 200 லிட்டர் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமராபாத் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த 3 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

காரை சோதனை செய்தபோது, அதில் 6 கேன்களில் 200 லிட்டர் டீசல் இருந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து 3 பேரை உமராபாத் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 27) , நவீன் (27), பச்சையப்பன் (42) என்பதும், துத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் கம்பெனியில் இருக்கும் ஜெனரேட்டரில் இருந்து டீசல் திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News