உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

Published On 2022-09-30 07:45 GMT   |   Update On 2022-09-30 07:45 GMT
  • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
  • காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர்மோகன் வெளி யிட்டு உள்ள செய்திக்குறி ப்பில் கூறி இருப்பதாவது:-

வருகிற காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு மேற்கண்ட தினம் டிரை டே ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள்மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மா க்மது பானக் கடைகள், டாஸ்மாக் மது பானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது. இவ்வாறு அதில் கூறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News