உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 230 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-06-25 04:03 GMT   |   Update On 2022-06-25 04:03 GMT
  • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
  • நேற்று காலை 108.16 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 107.72 அடியானது.

மேட்டூர்:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கலில் நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 195 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 5 ஆயிரத்து 230 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று காலை 108.16 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 107.72 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News