உள்ளூர் செய்திகள்
கைதான முதியவர் மேகநாதன்.

செய்வினை வைத்ததாக கூறி பூசாரி வீட்டிற்கு தீ வைத்த முதியவர்

Published On 2022-06-24 10:17 GMT   |   Update On 2022-06-24 10:17 GMT
  • கணேசன் வீட்டிற்கு மேகநாதன் தீ வைத்தது உறுதியானது. ‌ இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்தனர்.
  • விசாரணையில் தன்னுடைய வீட்டிற்கு கணேசன் செய்வினை வைத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் மேகநாதன் கூறினார்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் ஆலடிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன். கோவில் பூசாரி.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் (வயது 67) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணேசன் தனது வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் கணேசன் வீட்டிற்கு சென்ற மேகநாதன் பெட்ரோல் கேன் மற்றும் அரிவாளுடன் சென்றுள்ளார். பின்னர் கணேசன் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை வெளிப்புறமாக பூட்டி விட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதனால் கணேசனின் வீட்டு கதவு மற்றும் ஜன்னல் ஆகியவை தீப்பிடித்து எரிந்தன.

இதனால் தூங்கிக் கொண்டிருந்த கணேசன் அதிர்ச்சியில் கண்விழித்து சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று தீயை அணைத்து, கணேசன் மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் 4 பேரும் உயிர் தப்பினர்.

இதுகுறித்து கணேசன் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை அய்வு செய்தனர்.

அப்போது கணேசன் வீட்டிற்கு மேகநாதன் தீ வைத்தது உறுதியானது. ‌ இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்தனர்.

விசாரணையில் தன்னுடைய வீட்டிற்கு கணேசன் செய்வினை வைத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் மேகநாதன் கூறினார்.

இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News