உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

Published On 2023-06-24 06:25 GMT   |   Update On 2023-06-24 06:25 GMT
  • குளித்து கொண்டிருந்த சதீஸ்குமார் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சதீஸ்குமார். எலக்ட்ரீசியன். இவர் திருவிழாவுக்காக தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திற்கு வந்தார். அப்போது உறவினர்களுடன் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு சென்றார். அங்கு ஊட்டமலை பரிசல் நிலையம் அருகே குளித்து கொண்டிருந்த சதீஸ்குமார் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் அறிந்து உடனே அங்கு விரைந்து சென்று சதீஸ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News